உலகளவில் அமானுஷ்யமான செயல்கள் நடக்கும் இடத்திற்கென்று பெரும்பாலான கதைகள் உண்டு. அதில் முதன்மையான கதையாக இருப்பது இல்லினாய்ஸ் பகுதியில் அமைத்துள்ள பழைய மனநல மருத்துவமனை.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தில் பியோரியா என்னும் நகர்ப் பகுதியில் அமைத்துள்ளது பியோரியா மாநில மருத்துவமனை. இது மனநல சரியில்லாதவர்களுக்கான மருத்துவமனையாகச் செயல்பட்டுக்கொண்டு இருந்தது. கைவிடப்பட்ட இந்த இடம் பேய்கள் நடமாடும் பகுதி என்று சொல்லப்படுகிறது. அதற்கு இந்த மருத்துவமனையில் நடந்த சம்பவங்களும் இதனின் வரலாறும் தான் காரணம்.
இதனின் முந்தைய பெயர் இல்லினாய்ஸ் குணப்படுத்த முடியாத பைத்தியத்திற்கான புகலிடம் (Illinois Asylum for the Incurable Insane). இங்கு மிகவும் மோசமான நிலையிலிருந்த மனநல நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது. 1902 இல் ஜார்ஜ் ஜெல்லர் என்ற மருத்துவர் இந்த மருத்துவமனையின் பணிகளை நிறைவு செய்து திறந்துவைத்தார். அவரை இந்த மருத்துவமனையின் தந்தை என்று கூறுவர்.இங்கு மனநல நோயாளிகளுக்கென்று மனிதத்துவ மருத்துவம் கிடைக்கவேண்டுமென்று இதனைத் திறந்ததாகக் கூறப்படுகிறது.
முதற்கட்டத்தில் 33 கட்டடங்களுடன் தொடங்கி 63 கட்டிடங்கள் வரை அனைத்து வசதிகளுடன் கொண்டு வரப்பட்டன. அதில் தற்போது வெறும் 12 கட்டிடங்கள் மட்டும் உள்ளது. 1950களில் சுமார் 2800 மனநல நோயாளிகள் இங்குச் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். 1973 இல் போதுமான நிதியுதவி, செவிலியர்கள் உதவி இல்லாததால் மூடப்படவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.
Also Read :
செங்கடலில் ஒரு மரணக்குளம்.. உப்பால் உயிர்களைக் கொல்லும் இடம்!
இந்தநிலையில் எப்படி இந்த இடம் பேய் நடமாடும் பகுதியாக மாறியது என்ற கதை இன்னும் சுவாரசியமாக இருக்கும். ஆதரவற்று விடப்பட்ட கட்டிடங்களில் அமானுஷ்ய நடமாட்டம் இருப்பதாகச் சுற்றுவட்டாரப்பகுதி பேசிக்கொள்ள, அப்போது நிகழ்ந்த சம்பவம் அதனை உறுதிப்படுத்தியது. அது பிரபலமாகச் சொல்லப்படும் 'கல்லறை எல்ம்' கதை. 'ஓல்ட் புக்' என்று அழைக்கப்படும் நபரின் உருவத்தை அவர் இறந்த பிறகும் அங்குக் கண்டுள்ளனர்.
அந்த நபர் மனநல பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனையிலிருந்து அங்கேயே பிண அறையில் வேலைசெய்து கொண்டு வந்தவர். அவரின் இறுதிச் சடங்கின்போது அவரின் உருவத்தை மருத்துவர்.ஜார்ஜ் மற்றும் செவிலியர்களும் கண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து சவப்பெட்டியைத் திறந்து பார்த்ததில் 'ஓல்ட் புக்' பெட்டியிலிருந்துள்ளார். 'ஓல்ட் புக்' நபரின் உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. அவரை மானுவல் ஏ. புக்பைண்டர் (1878 - 1910) என்று அழைத்து வந்துள்ளனர். அதற்குக் காரணம் அவரால் வாய் பேசமுடியாது என்றும் அதனால் யாரும் பெயரைக் கேட்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அவர் மருத்துவமனைக்கு வருவதற்கு முன் புத்தக பைண்டிங் இடத்தில் வேலை பார்த்தால் இந்த பெயர் வந்துள்ளது.
மேலும் 1920களில் மருத்துவர்.ஜார்ஜ் எழுதிய புத்தகத்தில் மருத்துவமனையில் நடந்த பல அமானுஷ்ய சம்பவங்கள் பற்றி எழுதியுள்ளார். மேலும் 'ஓல்ட் புக்' பற்றிய அவரின் அனுபவத்தையும் அதில் தெரிவித்துள்ளார். காலப்போக்கில் அங்கு நிகழ்ந்த சம்பவம் பெரிதளவில் கவனிக்கப்பட்டு 'கோஸ்ட் ஹன்டர்ஸ்' என்ற டிவி சோவில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்தநிலையில் இந்த மருத்துவமனை தற்போது பொதுமக்களுக்கு அமானுஷ்ய நடவடிக்கை விசாரணைக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த மாதம் ஒருமுறை திறந்துவிடப்பட்டநிலையில் மேலும் ஆகஸ்ட் 6 மற்றும் 20 தேதிகளில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு 50 டாலர் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மருத்துவமனை கட்டிடம், கல்லறை போன்றவற்றைப் பார்க்கலாம். மேலும் பியோரியா மாநில மருத்துவமனை அருங்காட்சியகத்தில் மருத்துவமனையில் உபயோகத்திலிருந்த பொருட்கள், நோயாளிகளின் குறிப்புகள் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.