ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள நிலை எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் அரசு வேலிகளை அமைத்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே எல்லை பிரச்னையில் சிக்கல்கள் உள்ள நிலையில் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Also read: 10ல் ஒரு நபர் மட்டுமே ஆணுறை பயன்படுத்துகிறார் - தேசிய குடும்ப நல ஆய்வில் தகவல்
ஆப்கானிஸ்தானின் நிம்ரோஸ் மாகாணம் பாகிஸ்தான் உடன் நில எல்லையை பகிர்ந்துள்ளது. இங்குள்ள சாகர் புர்ஜாக் மாவட்டத்தில் எல்லை கண்காணிப்பு சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதையொட்டி பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று சோதனை மேற்கொண்டபோது, அவர்களை ஆப்கானிஸ்தான் வீரர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதேபோன்ற சம்பவம் கடந்த மாதம் 22-ம்தேதி நடைபெற்றது. அப்போது பாகிஸ்தானின் நங்ககர் மாகாணத்தின் எல்லைப் பகுதியில் இதேபோன்ற மோதல் ஏற்பட்டது. அங்கு பாகிஸ்தான் அமைத்திருந்த எல்லை வேலியை ஆப்கன் வீரர்கள் சேதப்படுத்தி உள்ளனர். தொடர்ச்சியான மோதல் சம்பவங்கள் ஆப்கன் - பாகிஸ்தான் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
Also read: ஒரே மாதத்தில் 87,000 கொரோனா மரணங்கள்.. கலக்கத்தில் ரஷ்யா
இரு நாடுகளுக்கும் இடையே 2600 கிலோ மீட்டர் தொலைவுக்கு நில எல்லை உள்ளது. இதனை டுராண்ட் லைன் என்ற கோடு, இரு நாடுகளையும் பிரிக்கிறது. இந்த விவகாரத்தில் சுமுகமான முடிவு எட்டப்படாமல் இருப்பதால் இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது உரசல்கள் ஏற்படுகின்றன.
நீண்ட தொலைவு என்பதால் இரு நாடுகளும் தங்களுக்கு சாதகமான பகுதிகளில் எல்லைகளை அமைத்து வருகின்றனர். 90 சதவீத நில எல்லையில் வேலி போடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Also read: உலகிலேயே முதல் முறையாக கைகளால் இல்லாமல் மூளையின் சிக்னலால் ட்வீட் செய்த மனிதர்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.