ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்றைய தினத்தில் இருந்து வருகிற 11ம் தேதி வரை அறிவிக்கப்படுகிறது.
BREAKING NEWS:
The Royal Swedish Academy of Sciences has decided to award the 2021 #NobelPrize in Physics to Syukuro Manabe, Klaus Hasselmann and Giorgio Parisi “for groundbreaking contributions to our understanding of complex physical systems.” pic.twitter.com/At6ZeLmwa5
இதில், 2021ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தேர்வுக்குழுவினர் இன்று அறிவித்தனர். அதில், ஜப்பானை சேர்ந்த சியுகுரோ மனாபே (syukuro Manabe), ஜெர்மனை சேர்ந்த கிளாஸ் ஹாசெல்மேன் (Klaus Hasselmann) மற்றும் இத்தாலியை சேர்ந்த ஜார்ஜியோ பாரிசி (Giorgio Parisi) ஆகிய மூவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
புவியின் காலநிலையில் மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் புவி வெப்பமடைதலை கணித்தல் ஆகியவற்றிற்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட இருக்கிறது.
முன்னதாக, நேற்றைய தினம் நடப்பு ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவின் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகிய 2 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.