சென்னையைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன், நியூசிலாந்து நாட்டின் பூர்வகுடி மக்களுக்கான அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நியூஸிலாந்தில் பிரதமர் ஜெசிந்தா தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார். அதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் உட்பட 5 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பிறந்து கேரளாவில் வளர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன், சிங்கப்பூரிலும், அதன்பின் நியூஸிலாந்திலும் கல்வி பயின்றார். நியூஸிலாந்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்த பிறகு அங்குள்ள இந்திய வம்சாவளியினருக்காக குரல் கொடுத்து வந்தார்.
அதன்பின் தொழிலாளர் கட்சியில் இணைந்து எம்.பியாக நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். தற்போது ஜெசிந்தா தலைமையிலான அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண்மணியாக இடம்பெற்றுள்ளார்.
Published by:Rizwan
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.