முகப்பு /செய்தி /உலகம் / Omicron: நியூயார்க்கில் பரவிய ஓமைக்ரான்

Omicron: நியூயார்க்கில் பரவிய ஓமைக்ரான்

நியூயார்க்கில் வாக்சின் போட்டுக்கொள்ள கியூவில் நிற்கும் நபர்கள்.

நியூயார்க்கில் வாக்சின் போட்டுக்கொள்ள கியூவில் நிற்கும் நபர்கள்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உலகை அச்சுறுத்தும் கோவிட்-19, அல்லது கொரோனா உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதால் அச்சம் பரவி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அமெரிக்காவின் நியூயார்க்கில் உலகை அச்சுறுத்தும் கோவிட்-19, அல்லது கொரோனா உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதால் அச்சம் பரவி வருகிறது.

இதுவரை 5 ஓமைக்ரான் கேஸ்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல் தெரிவித்துள்ளார். ஓமைக்ரான் அமெரிக்காவில் முதலில் கலிபோர்னியாவில் ஒருவருக்கு வந்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது, இப்போது நியூயார்க்கில் 5 பேருக்குப் பரவியுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் ஓமைக்ரான் ஸ்ட்ரெய்ன் தொற்றியுள்ளோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

கவர்னர் கேத்தி ஹோச்சுல் கூறும்போது, “நியூயார்க் மாகாணத்தில் 5 பேருக்கு ஓமைக்ரான் தொற்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. நான் தெளிவாகக் கூறுகிறேன். அபாய மணி ஒலிக்க வேண்டிய அவசியமில்லை. இது பரவாமல் தடுக்கும் சாதனங்கள் எங்களிடத்தில் உள்ளன” என்று உறுதியளித்துள்ளார்.

அமெரிக்காவின் மினசோட்டா, கொலராடோ ஆகிய மாகாணங்களிலும் பரவியுள்ளது. கலிபோர்னியாவில் முதலில் கண்டுப்பிடிக்கப்பட்ட நபர் தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் செய்து திரும்பியவர்.

B.1.1.529 என்ற இந்த வைரஸ்தான் ஓமைக்ரான் என்று அழைக்கப்படுகிறது. இது தென் ஆப்பிரிக்காவில் நவம்பர் 24ம் தேதி கண்டுப்பிடிக்கப்பட்டது. இது கவலையளிக்கக் கூடிய வேரியண்ட் என்று உலகச் சுகாதார அமைப்பு வகைப்படுத்தியது.

Also Read: ஒமைக்ரான் உலகளவில் மிக அதிக ஆபத்தை ஏற்படுத்தும் - WHO எச்சரிக்கை

 இந்தியாவில் கர்நாடகாவில் இருவருக்கு ஓமைக்ரான் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 66 வயது ஆண் ஒருவருக்கும் 46 வயது ஆண் ஒருவருக்கும் தொற்று உறுதியானது. இந்நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதில் ஓமைக்ரான் பாதிக்கப்பட்ட 46 வயதான மருத்துவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மொத்தம் 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read: ஒமைக்கரான் அச்சுறுத்தல் : கர்நாடகாவில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்?

 அவர்களில் யாருக்கும் எவ்விதத் தீவிர அறிகுறியும் தென்படவில்லை. அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் என்றும் கர்நாடக சுகாராதத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 5 பேரிடமும் நேரடியாகவும் மறைமுகமாகவும் 250 க்கும் மேற்பட்டோர் தொடர்பில் இருந்தது தெரியவந்த நிலையில், அவர்கள் யாருக்கும் பாதிப்புக்கான அறிகுறிகள் இல்லை என்று கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

First published:

Tags: Corona, NewYork, Omicron