ஐநா-வின் நீதிமன்றத்தில் ‘ரோஹிங்கியா மக்களை இனப்படுகொலை செய்யும் நோக்கமில்லை' என அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மியான்மரின் ஆங் சாங் சூகி விளக்கம் அளித்துள்ளார்.
ஐநா-வில் பேசியுள்ள ஆங் சாங் சூகி, “மியான்மர் ராணுவம் சமம் அற்ற முறையில் நடந்திருக்கலாம். ஆனால், ரோஹிங்கிய சிறுபான்மை மக்களை ஒட்டுமொத்தமாக அழிக்கும் நோக்கம் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு ரோஹிங்கியா மக்கள் மீது மியான்மர் ராணுவம் கொடூரமானத் தாக்குதலை நடத்தியது.
இதனால் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். இக்குற்றச்சாட்டை முன்வைத்து ஆப்ரிக்க கண்டத்தின் காம்பியா என்னும் நாடு ஐநா-வில் மியான்மர் மீது வழக்கு தொடர்ந்தது.
இதற்கு விளக்கமளிக்கவே இன்று ஐநா நீதிமன்றத்துக்கு ஆங் சாங் சூகி வந்துள்ளார். “மியான்மரின் ராக்கின் மாநிலத்தில் நிலவும் சூழலைத் தெரிந்து கொள்ளாமல் தவறான ஒரு வழக்கை காம்பியா எடுத்து வந்துள்ளது. 2017-ல் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா போராளிகள் தாக்கியதற்கு எதிர்ப்பாகத்தான் மியான்மர் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது” எனப் பதிலளித்துள்ளார்.
மேலும் பார்க்க: ரோஹிங்கியா குழந்தைகளுக்கு மறுக்கப்படும் கல்வி... மனித உரிமை கண்காணிப்பகம் கண்டனம்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Myanmar