வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகும் நிலையில் அவர் உயிரோடு தான் இருக்கிறார் என அந்நாட்டு முன்னாள் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
வடகொரியாவில் ஆண்டுதோறும், ஏப்ரல் மாதம் 15-ம் தேதி, வட கொரியாவின் தந்தை என்று அழைக்கப்படும் கிம் இல் சங்கின் பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு, நடைபெற்ற விழாவில் கிம் ஜாங் உன் கலந்துகொள்ளவில்லை. இதைத்தொடர்ந்தே அவரைப்பற்றி வதந்திகள் பரவத்தொடங்கின.
கிம், இதய கோளாரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக சில செய்திகள் வெளியாகின. கொரோன வைரசுக்கு பயந்து அவர் ஒளிந்துகொண்டிருப்பதாக சிலர் கூறினர். இருதய சிகிச்சையின் போது மருத்துவருக்கு ஏற்பட்ட கைநடுக்கத்தால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது, மூளைச்சாவு ஏற்பட்டு விட்டது என்று பல்வேறு தகவல்கள் வெளியாகின.
கிம் உடல்நிலை குறித்து மற்ற நாடுகள் பல்வேறு தகவல்கள் வெளியிட்டு வந்த நிலையில் அண்டை நாடான தென்கொரிய அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் வடகொரியாவில் இருந்து வெளியேறி தென்கொரியாவில் வாழ்ந்து வரும் தே யோங் ஹோ தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்று அளித்த பேட்டியில், “கிம்முக்கு அறுவை சிகிச்சை நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால் ஒரு விஷயம் தெளிவாக தெரிய வருகிறது. அவர் உயிருடன் தான் இருக்கிறார். ஆனால் அவரால் தானாக எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது“ என்றார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.