முகப்பு /செய்தி /உலகம் / இந்தோனேஷியாவில் இருந்து புறப்பட்ட விமானம் நடுக்கடலில் விழுந்து விபத்து

இந்தோனேஷியாவில் இருந்து புறப்பட்ட விமானம் நடுக்கடலில் விழுந்து விபத்து

விபத்துக்குள்ளான விமானம்

விபத்துக்குள்ளான விமானம்

இந்தோனேஷியாவில் இருந்து புறப்பட்ட 13 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்தது. இதனால் விமானத்தின் சிக்னலை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது.

  • 1-MIN READ
  • Last Updated :

இந்தோனேஷியாவில் இருந்து 188 பேருடன் புறப்பட்ட விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

ஜகார்தா விமான நிலையத்திலிருந்து பங்கல் பினாங் பகுதியை நோக்கி, காலை 6.20 மணிக்கு லையன் ஏர் விமானம் புறப்பட்டது. இதில் 3 குழந்தைகள், விமானப் பணியாளர்கள் 8 பேர் உள்ளிட்ட 188 பேர் பயணித்தனர். புறப்பட்ட 13 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்தது. இதனால் விமானத்தின் சிக்னலை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது.

இந்தோனேசியாவில் உள்ள பாங்கல் பினாங்கில் உள்ள டிபாடி அமீர் விமான நிலையத்தில், கடலில் விழுந்த லயன் ஏர் விமானத்தில் (JT610) அழுதுக்கொண்டிருக்கும்,  பயணிகளின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர். (Antara Foto/Elza Elvia via REUTERS)

இந்நிலையில், டேன்ஜுங் பிரியோக் துறைமுக பகுதியில் ஜாவா கடலில் விமானம் விழுந்ததை சிலர் பார்த்ததாக இந்தோனேஷிய வானொலி தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து, விமானத்தை தேடும் பணிக்காக கப்பல்கள் மற்றும் மீட்புக் குழுவினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். போயிங் 737 - மேக்ஸ் ஜெட் வகையைச் சேர்ந்த இந்த விமானம் கடந்த ஆண்டுதான் பயன்பாட்டுக்கு வந்தது. அறிமுகமாகி ஒரு ஆண்டிலேயே விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பதால் அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Also see...

First published:

Tags: Indonesia, Jakarta, LionAir