பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் பெரும்பாலானோர் நிரந்ததரமாக வீட்டில் இருந்தே பணியாற்றுவர்கள் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் பெரும்பாலான நாடுகள் தேசிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.
இதனால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதித்துள்ளன.
ஊரடங்கு முடியும் வரை வீட்டிலிருந்தே பணிபுரியும் நடைமுறை கடப்ப்பிடிக்கப்படும். இந்நிலையில் உலகின் மிகப் பெரிய சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்தின் ஊழியர்களும் கடந்த 2 மாதங்களாக அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலிருந்தே பணிபுரிகின்றனர்.
கொரோனா தொற்றால் ஊழியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இனி பெரும்பாலான ஊழியர்கள் நிரந்ததரமாக வீட்டில் இருந்தே பணியாற்றுவார்கள் என மார்க் ஜுக்கர் பெர்க் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரவர் இடங்களுக்கு ஏற்றவாறு சம்பளம் மாறுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி 48 ஆயித்துக்கும் அதிகமான அந்நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also see...
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.