வங்கதேசத்தில் தலைநகர் டாக்காவில் குலிஸ்தான் பகுதியில் உள்ள 7 அடுக்கு கொண்ட வணிகக் கட்டடத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும், 14 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாகக் கூட்டநெரிசலாக இருக்கும் சித்திக் பஜாரில் அமைந்துள்ள 7 அடுக்கு வணிக கட்டடத்தில் மாலை 4 மணியளவில் பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. வெடிப்புக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் கீழ் மாடியில் அமைந்துள்ள சுகாதார பொருட்கள் விற்பனை செய்யும் கடையிலிருந்து தொடங்கி இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Also Read : அழிவை நோக்கி ஜப்பான்... உடனே இதில் கவனம் செலுத்துங்கள்! - பிரதமரை அலெர்ட் செய்த ஆலோசகர்!
தொடர்ந்து தீயணைப்புப் படையினர் விரைந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். கட்டடத்தில் ஏற்பட்ட வெடிப்பு சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bangladesh, Blast