அரசாங்க அலுவல் பணிகளுக்கு காகித்தை அறவே பயன்படுத்தாத, 100% காகிதத்திலிருந்து விடுதலை பெற்ற அரசாக மாறியுள்ளது துபாய்.
துபாய் அரசின் அனைத்து உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை பரிமாற்றங்கள், அரச பரிவர்த்தனைகள், சேவைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகியுள்ளது. இதனை இளவரசர் ஷேக் ஹம்தன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், “இனி துபாய் உலகின் முன்னிலை டிஜிட்டல் தலைநகராக விளங்கும் என்று குறிப்பிட்டுள்ளார். காகிதப் பயன்பாடு முற்றிலும் துறக்கப்பட்டதால் அரசுக்கு 350 மில்லியன் டாலர் மிச்சமாகும்.
மேலும் இதன் மூலம் 14 மில்லியன் மனித வேலை நேரங்களும் மணித்துளிகளும் மிச்சமாகிறது. இதனாலும் அரசுக்கு லாபம்தான். துபாய் அரசை இனி நிர்வகிக்கப் போவது 1,800 வகையான டிஜிட்டல் சேவைகளே” என்கிறார் இளவரசர் ஷேக் ஹம்.
இதன் மூலம் 336 மில்லியன் பேப்பர் பயன்பாடுகளை தூக்கி கடாசியுள்ளது துபாய். துபாயில் இது 5 கட்டங்களாக நிறைவேற்றப்பட்டது. இதில் ஒவ்வொரு கட்டத்திலும் துபாய் அரசின் ஒவ்வொரு துறையும் காகிதப் பயன்பாடிலிருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டது. கடைசியில் 45 அரசுத்துறைகள் அனைத்திலும் பேப்பர் இல்லாத டிஜிட்டல் நடைமுறைகள் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டன.
Also Read: omicron news latest| விரைவில் ஓமிக்ரான் பேரலை வீசும், 2 டோஸ் தடுப்பூசிப் பாதுகாப்பு அளிக்காது- போரிஸ் ஜான்சன்
இந்த துறைகள் 1800 முக்கியமான டிஜிட்டல் சேவைகளையும் 10,500 முக்கியமான பரிவர்த்தனைகளையும் வழங்குகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.