அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடைபெறவுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாக அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜோ பிடனும் அதிபர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, தற்போது பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
அதிரடிக்கு பெயர் பெற்ற அதிபர் ட்ரம்ப் பிரச்சாரத்தின்போது அதிரடியாக பேசிவருகிறது. இந்தநிலையில், பிரச்சாரத்தில் பேசிய அதிபர் ட்ரம்ப், ‘அதிபர் தேர்தலில் நான் தோல்வியடைந்தால் என்ன செய்வேன் என்று கற்பனை செய்தீர்களா? வரலாற்றில் மிக மோசமான வேட்பாளரிடம் தோல்வியடைந்தால், என்னால் நன்றாக இருக்க முடியாது. அதனால், ஒருவேளை இந்த நாட்டிலிருந்து வெளியேறிவிடுவேன். எனக்குத் தெரியாது’ என்று தெரிவித்தார். அவருடைய பேச்சைக் கேட்டு கூட்டத்திலிருந்து சிரித்தார்கள்.
முன்னதாக பிரச்சாரத்தில் பேசிய ட்ரம்ப், ‘ஜோ பிடன் குடும்பம் மோசடிக் குடும்பம். அவர்களைக் குடும்பத்துடன் சிறையிலடைக்கவேண்டும்’ என்றும் கடும் காட்டமாக பேசியிருந்தார்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.