செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோளை அனுப்பும் சீனாவின் திட்டத்திற்கு டினாவென் 1 எனப் பெயரிடப்பட்டுள்ளது.
1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி சீனா முதன்முதலில் ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. இதன் 50 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி தனது செவ்வாய் கிரக ஆராய்ச்சி குறித்து சீனா அறிவித்துள்ளது.
டினாவென் 1 திட்டத்தின் மூலம் செவ்வாயின் சுற்றுப்பாதையில் சுற்றி வரும் வகையில் ஆர்பிட்டரையும், செவ்வாயில் தரையிறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையில் ரோவரையும் சீனா அனுப்ப உள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.