உலகை அமைதி வழியில் நடத்திச் செல்லும் நோக்கத்திற்காக வடகொரியாவுடன் இணைந்து பணியாற்றி தயார் என சீன அதிபர் ஜி ஜின் பிங் தெரிவித்துள்ளார்.
வடகொரியா, சீனா மற்றும் அமெரிக்க என்கிற முக்கோண அதிகார போட்டி இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. தைவான் விவகாரத்தில் சீனாவும் அமெரிக்காவும் முட்டி மோதி வரும் நிலையில், தென்கொரியாவிற்கு வடகொரியா கொடுக்கும் குடைச்சலுக்காக தென்கொரியாவிற்கு ஆதரவதாக அமெரிக்கா குரல் கொடுத்து வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்திலும் தென் சீனக்கடல் பிராந்தியத்திலும் ஒரு வித பதற்றமான சூழலே நிலவி வருகிறது. இத்தகைய பதற்றமான சூழலில், எரியும் நெருப்பில் எண்ணெயை வார்ப்பது போல, வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தி அமெரிக்காவிற்கு எரிச்சல் ஏற்படுத்தி வருகிறார்.
தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு… ரஷ்யா மீது ஐரோப்பிய நாடாளுமன்றம் பகீர் குற்றச்சாட்டு
இந்தோனேஷியாவில் கடந்த வாரம் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் உலகத் தலைவர்கள் ஒன்று கூடி பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டிருந்த நேரம்தான் கிம், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணையை சோதித்து பார்த்தார்.
ஜி-20 மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் பைடனை ஜி ஜின் பிங் சந்தித்து பேசினார். அப்போது கூட வடகொரியாவின் அச்சுறுத்தலை நிறுத்த சீனா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பைடன் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்கு நேர் மாறாக சீன அதிபர் வடகொரியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது என வடகொரியா கூறியுள்ளது.
சீனாவில் கொரோனா லாக்டவுனுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை
செய்தியாளர்: ரொசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: China, North korea