இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டுப் போரில் மனிதஉரிமை மீறல்களை ராணுவம் அரங்கேற்றியதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில், முன்னாள் அதிபரும், உள்நாட்டுப் போரின்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவருமான கோத்தபய ராஜபக்சே, அவரது சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்தா ராஜபக்சே ஆகியோருக்கு கனடா அரசு தடை விதித்துள்ளது.
இதேபோல, 2000-ம் ஆண்டில் தமிழர்களை படுகொலை செய்ததாக மரண தண்டன விதிக்கப்பட்ட ராணுவ அதிகாரி சுனில் ரத்னாயகே, கடற்படை கமாண்டர் பிரசாத் ஹெட்டியாரச்சி ஆகியோருக்கும் கனடா அரசு தடைவிதித்துள்ளது. இந்தத் தடையின்படி, இந்த 4 பேரும் கனடாவுடன் நிதி பரிமாற்றங்களில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டுள்ளது. கனடாவுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்களின் போராட்டத்தால் கோத்தபய ராஜபக்சே, மகிந்தா ராஜபக்சே ஆகியோர் பதவிவிலகியது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.