தாலிபான்களுக்கு பயந்து நாட்டைவிட்டு தப்பிச்சென்ற முன்னாள் ஆப்கானிஸ்தான் அதிபரை கைது செய்யுமாறு இண்டர்போல் காவல்துறையினருக்கு தஜிகிஸ்தானில் உள்ள ஆப்கன் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் பல்வேறு நகரங்களை தங்கள் பிடியில் கொண்டு வந்த தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தலைநகர் காபுலில் நுழைந்தனர். அந்நகர எல்லையில் தங்களின் வீரர்களை குவித்து வைத்திருந்த தாலிபான்கள், வன்முறையின்றி அதிகார பறிமாற்றத்திற்காக காத்திருந்தனர். இதையடுத்து உயிருக்கு பயந்த அதிபர் அஷ்ரப் கனி, அன்றைய தினம் விமானப் படை விமானத்தில் நாட்டை விட்டே தப்பிச் சென்றார்.
Also Read:
கார்கள், ஹெலிகாப்டர் முழுக்க பணத்துடன் ஆப்கனை விட்டு தப்பியோடிய அதிபர் அஷ்ரப் கனி - புதிய தகவல்கள்
தஜிகிஸ்தானுக்கு சென்ற அவருடைய விமானத்தை தங்கள் நாட்டில் தரையிறங்க அந்நாடு மறுத்தது. இந்நிலையில் அவர் தற்போது ஓமனில் தஞ்சமடைந்திருக்கிறார். அவருடன் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப் உள்ளிட்ட முன்னாள் அதிகாரிகள் உடன் இருக்கின்றனர். அங்கிருந்து அஷ்ரப் கனி அமெரிக்காவுக்கு தப்பிச் செல்லக் கூடும் என கூறப்படுகிறது.
இதனிடையே ஆப்கானிஸ்தானில் இருந்து அஷ்ரப் கானி விமானத்தில் புறப்பட்ட போது 4 கார்களும், ஒரு ஹெலிகாப்டர் முழுக்க பணத்தை நிரப்பிக் கொண்டு சென்றதாகவும் ரஷ்ய தூதரக செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
Also Read:
‘உங்கள் தைரியத்துக்கும், உத்வேகத்திற்கும் சல்யூட்!’ – தாலிபான்களை பாராட்டிய இந்திய முஸ்லிம் அமைப்பு!
அஷ்ரப் கானி ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி ஓடிய விதம் குறித்து பேசிய ரஷ்ய தூதரக செய்தித்தொடர்பாளரான நிகிடா இஷென்கோ, “நான்கு கார்களில் பணம் நிறைந்திருந்தன, ஹெலிகாப்டரில் பணத்தை நிரப்ப முயன்றனர், ஆனால் எல்லா பணத்தையும் அதில் நிரப்ப முடியவில்லை. கொஞ்சம் பணம் ஓடுபாதையில் விடப்பட்டது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் ஆப்கன் மக்களின் வரிப்பணத்துடன் தப்பியோடிய அஷ்ரப் கனியை கைது செய்ய வேண்டும் என்று தஜிகிஸ்தானில் உள்ள ஆப்கன் தூதரகம், சர்வதேச காவல்துறையான இண்டர்போலை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் அவருக்கு உடந்தையாக ஹம்தல்லா மொஹிப், பசல் மக்மூத் பஸ்லி ஆகியோரை பொதுமக்களின் பணத்தை திருடிச் சென்ற குற்றத்திற்காக கைது செய்ய வேண்டும் என ஆப்கன் தூதரகம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆப்கனில் இருந்து புறப்பட்ட அஷ்ரப் கானி, சமூக வளைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மக்கள் ரத்தம் சிந்துவதை தவிர்க்கவே நாட்டைவிட்டு வெளியேறியதாக குறிப்பிட்டுள்ளார். இனி நாட்டின் மரியாதைக்குக்கும், பாதுகாப்புக்கும் தலிபான்களே பொறுப்பாவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, அஷ்ரப் கனி உள்ளிட்டோர் நாட்டை விட்டு வெளியேறியதை தொடர்ந்து, போர் முடிவுக்கு வந்ததாகவும், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும், தாலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.