இந்தியாவில் இருந்து கடந்த 21-ம் தேதி சீனா சென்ற சிறப்பு விமானத்தில் 2 இந்தியர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டதால், இந்தியர்களை அனுமதிக்க அந்நாடு மறுப்பு தெரிவித்துள்ளது.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம் டெல்லியில் இருந்து சீனாவின் குவாங்சோ நகருக்கு பயணிகள் இன்றி காலியாக சென்றது. இதில் பயணிக்க இருந்த இந்திய தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினர் உள்பட ஏராளமானோரின் பயணம் தடைபட்டது.
குவாங்சோவிற்கு சென்ற அந்த காலி விமானத்தில் அங்கிருந்த 86 இந்தியர்கள் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்தியாவில் இருந்து கடந்த 21-ம் தேதி சீனா சென்ற சிறப்பு விமானத்தில் 2 இந்தியர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டதால், இந்தியர்களை அனுமதிக்க அந்நாடு மறுப்பு தெரிவித்துள்ளது
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.