இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் நுழையவில்லை - பிரதமர் மோடி
இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டுத்தர மாட்டோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்

அனைத்துக்கட்சி கூட்டம்
- News18
- Last Updated: June 19, 2020, 10:59 PM IST
லடாக் எல்லையில் இந்திய - சீன ராணுவ வீரர்களிடையே நடைபெற்ற மோதலில், இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், பிரச்னைக்கு யார் காரணம் என இந்தியாவும், சீனாவும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வரும் நிலையில், எல்லையில் நடந்த மோதல் தொடர்பாக விவாதிக்கவும், அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கவும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, மாலை 5 மணியளவில் காணொலி காட்சி மூலம் தொடங்கிய அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையேற்றார். இதில், அதிமுக சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றனர். அதேபோல், பல்வேறு கட்சித் தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
படிக்கஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சரான சீன நிறுவனத்தை நீக்க முடியாது - பி.சி.சி.ஐ திட்டவட்டம்
படிக்கராணுவ ஜெனரல் தலைமையில் பேச்சுவார்த்தை: சிறைபிடிக்கப்பட்ட 10 இந்திய வீரர்கள் துன்புறுத்தப்படாமல் விடுவிப்பு..
இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் நுழையவில்லை என தெரிவித்தார்.
இந்திய - சீன ராணுவ வீரர்களின் மோதலின்போது, இந்திய நிலைகள் எதையும் சீன ராணுவம் கைப்பற்றவில்லை எனக் கூறிய பிரதமர் மோடி, எல்லையில் ஊடுருவ முயன்றவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எந்த சூழலையும் சமாளிக்கும் திறன் நமது ராணுவத்திற்கு இருப்பதாகவும், புதிதாக கட்டப்பட்டுள்ள நிலைகளால், இந்திய ராணுவத்தின் கண்காணிக்கும் திறன் கூடியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டுத்தர மாட்டோம் என்று கூறிய அவர், எந்த நடவடிக்கைக்கும் ராணுவம் தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையடுத்து, மாலை 5 மணியளவில் காணொலி காட்சி மூலம் தொடங்கிய அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையேற்றார். இதில், அதிமுக சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றனர். அதேபோல், பல்வேறு கட்சித் தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
படிக்கராணுவ ஜெனரல் தலைமையில் பேச்சுவார்த்தை: சிறைபிடிக்கப்பட்ட 10 இந்திய வீரர்கள் துன்புறுத்தப்படாமல் விடுவிப்பு..
இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் நுழையவில்லை என தெரிவித்தார்.
இந்திய - சீன ராணுவ வீரர்களின் மோதலின்போது, இந்திய நிலைகள் எதையும் சீன ராணுவம் கைப்பற்றவில்லை எனக் கூறிய பிரதமர் மோடி, எல்லையில் ஊடுருவ முயன்றவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எந்த சூழலையும் சமாளிக்கும் திறன் நமது ராணுவத்திற்கு இருப்பதாகவும், புதிதாக கட்டப்பட்டுள்ள நிலைகளால், இந்திய ராணுவத்தின் கண்காணிக்கும் திறன் கூடியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
I thank leaders from all parties, who gave their valued opinions during today’s all-party meet.
Here are my remarks at the meeting... pic.twitter.com/g9FUADU0Ua
— Narendra Modi (@narendramodi) June 19, 2020
மேலும், இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டுத்தர மாட்டோம் என்று கூறிய அவர், எந்த நடவடிக்கைக்கும் ராணுவம் தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.