அடல் பென்ஷன் யோஜனா திட்டம் நாட்டின் அமைப்புசாரா துறையை குறிவைக்கிறது. இது தனியார் துறையில் பணிபுரியும் மற்றும் சுயதொழில் செய்யும் நபர்களுக்கும் சிறந்த திட்டமாக உள்ளது. இந்த அடல் பென்ஷன் திடத்தில் இதுவரை 2.4 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர்.
முன்னதாக, தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) கணக்குகளை வைத்திருந்தவர்களுக்கு அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1000 தொகையை வழங்கியது. அவை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மானியங்களால் நிதியளிக்கப்பட்டன. அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 18 முதல் 40 வயது வரையிலான எந்தவொரு இந்திய குடிமகனும், குடிமகளும் ஒரு கணக்கைத் திறக்கலாம். அந்த நபர் 60 வயதை எட்டும் போது இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை பெறமுடியும். நீங்கள் இந்திய குடிமகனாக இருந்து 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால் அடல் பென்ஷன் யோஜனா உங்களுக்கு வழங்கிய சலுகைகளைப் பெற நீங்கள் தகுதியுடையவர்களாக கருதப்படுவீர்கள்.
இந்தத் திட்டத்தின் ஓய்வூதியத் தொகை தனிநபரின் சந்தாவின் அடிப்படையில் 1,000 முதல் 5,000 ரூபாய் வரை இருக்கும். ஒரு தொழிலாளி ஆண்டுக்கு 1,000 ரூபாய் ஓய்வூதியம் பெற நிர்ணயித்த பிறகு, அவரது மொத்த பங்களிப்பில் 50% அரசாங்கமும் பங்களிக்கிறது. இந்த திட்டம் வழங்கும் ஓய்வூதியத்தில் 5 வகைகள் உள்ளன. ஓய்வூதியத் தொகையில் ரூ.1,000, ரூ. 2,000, ரூ.3,000, ரூ.4,000, மற்றும் ரூ.5,000 ஆகியவை அடங்கும்.
வீடு வாங்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
குறைந்தது 20 ஆண்டுகளுக்கு நீங்கள் பங்களிப்பு செய்யலாம். இதற்கு சரியான மொபைல் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு உங்களிடம் இருக்க வேண்டும். புற்றுநோய் போன்ற முனைய நோய் அல்லது கணக்கு வைத்திருப்பவரின் மரணம் போன்ற சூழ்நிலைகளைத் தவிர்த்து, ஒருவர் ஓய்வூதியத்தை முன்கூட்டியே செலுத்துதல் மற்றும் இத்திட்டத்தில் இருந்து வெளியேறுவது அனுமதிக்கப்படாது.
பங்களிப்பு தொகை:
ஒருவர் குறைந்தபட்ச முதலீடு செய்ய விரும்பினால் அவை ஓய்வூதிய திட்டங்கள் மற்றும் வயது ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுகிறது. உதாரணமாக, 18 வயது நிரம்பிய நபர் ஓய்வூதியத் தொகையாக ரூ.1,000 ரூபாய் சம்பாதிக்க விரும்பினால், அதற்கு அவர் செலுத்த வேண்டிய தொகை ரூ.42 ஆகும். ஒருவேளை ஓய்வூதியமாக 5,000 ரூபாய் சம்பாதிக்க விரும்பினால், அவரின் பங்களிப்பு தொகை ரூ.210 ஆக இருக்க வேண்டும். அதேபோல அதிகபட்ச முதலீடும் ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் முதலீட்டாளரின் வயது ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுகின்றன. உதாரணத்திற்கு, 40 வயது நிரம்பிய நபர் ஓய்வூதிய வருமானமாக 1,000 ரூபாய் பெற விரும்பினால் அவரின் பங்களிப்பு ரூ.264 ஆக இருக்கும். அதே நேரத்தில் ஓய்வூதியத் தொகை ரூ.5,000 பெற விரும்பினால் அவரின் முதலீடு ரூ.1,318 ஆக இருக்கும்.
திட்டத்தின் பங்களிப்பு:
ஓய்வூதிய திட்ட கணக்கு ஒரு வங்கி கிளை வழியாகவோ அல்லது ஆன்லைனில்வோ திறக்கப்பட்டதா என்பதைப் பொருட்படுத்தாமல் இந்த திட்டத்திற்கான பங்களிப்பு உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து தானாக டெபிட் செய்யப்படும்.
திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
ஓய்வூதிய திட்டத்தில் சேர விரும்பும் ஒருவர் இதில் பதிவு செய்ய சேமிப்பு வங்கி கணக்கு, ஆதார் எண் மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை கொடுக்க வேண்டும்.
அடல் ஓய்வூதிய யோஜனாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
* அனைத்து தேசிய வங்கிகளும் ஓய்வூதிய யோஜனாவை வழங்குகின்றன. அதாவது உங்கள் சேமிப்புக் கணக்கு உள்ள வங்கியை பார்வையிட்டு நீங்கள் இத்திட்டத்தில் சேரலாம்.
* பதிவு படிவங்கள் ஆன்லைனிலும், வங்கி கிளைகளிலும் கிடைக்கின்றன. நீங்கள் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதை வீட்டில் பூர்த்தி செய்து வங்கி கிளையில் சமர்ப்பிக்கலாம் அல்லது வங்கியில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
* இதற்கு செல்லுபடியாகும் மொபைல் எண்ணை வழங்கவும்.
* உங்கள் ஆதார் அட்டையின் புகைப்பட நகலை விண்ணப்ப படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
* உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் உறுதிப்படுத்தல் எஸ்எம்எஸ் பெறுவீர்கள்.
உங்கள் பங்களிப்புகளில் இயல்புநிலை ஏற்பட்டால், அபராதம் விதிக்கப்படும்
* மாத பங்களிப்பு ரூ.100 ஆக இருந்தால் ரூ.1 அபராதம் விதிக்கப்படும்.
* மாத பங்களிப்பு ரூ. 101 முதல் 500 வரை இருந்தால் ரூ .2 அபராதம்.
* மாத பங்களிப்பு ரூ .501 / - முதல் 1000 / - வரை இருந்தால் ரூ .5 அபராதம்.
* மாதத்திற்கு ரூ.1001 / - க்கு மேல் பங்களிப்பு இருந்தால் ரூ.10 அபராதம்.
கணக்கை திறந்த பிறகு நீங்கள் எந்த பங்களிப்பு செய்யவில்லை என்றால்,
* 6 மாதங்களுக்குப் பிறகு கணக்கு முடக்கப்படும்.
* 12 மாதங்களுக்குப் பிறகு கணக்கு செயலிழக்கப்படும்.
* 24 மாதங்களுக்குப் பிறகு கணக்கு மூடப்படும்.
முதலீட்டு காலமானது தனிநபர்கள் அடல் ஓய்வூதிய யோஜனாவில் முதலீடு செய்யத் தொடங்கும் வயதைப் பொறுத்து பங்களிப்புத் தொகையை செலுத்த வேண்டும். உதாரணமாக, ஒரு நபருக்கு 40 வயது என்றால், அவரது முதிர்வு காலம் 20 ஆண்டுகள் ஆகும். அதேபோல், ஒரு நபருக்கு 25 வயது என்றால், முதிர்வு காலம் 35 ஆண்டுகள் ஆகும்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.