ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கடம்பூர் மலை பகுதியில் உகினியம் என்ற கிராமத்தில் அங்குள்ள அரசு உயர்நிலை பள்ளியின் வளாகத்தில் இன்று காலை சரியாக 10.30 மணியளவில் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. திடீரென ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் அப்பகுதி மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
பெங்களூருவில் இருந்து திருப்பூர் நோக்கி ஹெலிகாப்டர் சென்ற போது மோசமான வானிலை நிலவியுள்ளது. மேலும், கடுமையான பனிமூட்டம் காரணமாக பாதை தெளிவாக தெரியாததால், அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டரில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்ட 4 பேர் சென்றனர். 1 மணி நேரமாக அங்கு காத்திருந்த ரவிசங்கர் மற்றும் அவர் உதவியாளர்கள் வானிலை சீரான பிறகு உகினியம் கிராமத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Erode, Local News, Sathyamangalam