ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையில் அருந்தியர்கள் சமூக மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையில், கடந்த 13 ஆம் தேதி பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் சமூகம் குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையானது.
இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர். மேலும் காவல் நிலையத்திலும் தேர்தல் அதிகாரியிடமும் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக பேசிய சீமான், தான் அருந்தியர்கள் குறித்து உண்மையைதான் பேசினேன் எனவும் வரலாற்று ஆவணங்களை காட்ட தயார் எனவும் தெரிவித்தார். இந்நிலையில் கருங்கல்பாளையம் போலீசார் இன்று சீமான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.