முகப்பு /செய்தி /ஈரோடு / அருந்ததியர் சர்ச்சை: சீமான் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!

அருந்ததியர் சர்ச்சை: சீமான் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!

சீமான்

சீமான்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் சமூகம் குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையானது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையில் அருந்தியர்கள் சமூக மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையில், கடந்த 13 ஆம் தேதி பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் சமூகம் குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையானது.

இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர். மேலும் காவல் நிலையத்திலும் தேர்தல் அதிகாரியிடமும் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக பேசிய சீமான், தான் அருந்தியர்கள் குறித்து உண்மையைதான் பேசினேன் எனவும் வரலாற்று ஆவணங்களை காட்ட தயார் எனவும் தெரிவித்தார். இந்நிலையில் கருங்கல்பாளையம் போலீசார் இன்று சீமான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

First published:

Tags: Erode Bypoll, Erode East Constituency, Seeman