முகப்பு /செய்தி /ஈரோடு / தாய், கணவன் சடலத்துடன் ஒரு வாரம் வீட்டிக்குள்ளேயே இருந்த மூதாட்டி.. ஈரோட்டில் பகீர் சம்பவம்..

தாய், கணவன் சடலத்துடன் ஒரு வாரம் வீட்டிக்குள்ளேயே இருந்த மூதாட்டி.. ஈரோட்டில் பகீர் சம்பவம்..

சடலங்களுடன் வீட்டில் வசித்த மூதாட்டி

சடலங்களுடன் வீட்டில் வசித்த மூதாட்டி

Crime News : கோபிசெட்டிபாளையம் அருகே இறந்துபோன கணவன் மற்றும் தாயார் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாததால் ஒரு வார காலமாக சடலங்களை வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த மூதாட்டி.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வண்டிப்பேட்டை குமணன் வீதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி கனகாம்பாள்(80). இவர்களது மகள் சாந்தி(60). சாந்திக்கு திருமணமான பின்பு கணவர் மோகனசுந்தரம், மகன் சரவணக்குமார்(34), மகள் சசிரேகா என்ற மகளுடன் தாயார் வீட்டிலேயே இருந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மகள் சசிரேகாவிற்கு திருமணமாகி காங்கேயத்தில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில், இன்று குமணன் வீதி பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் கோபிசெட்டிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாந்தியின் வீட்டின் முன்பு துர்நாற்றம் வீசியதால் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டினுள் சாந்தியின் அம்மா கனகாம்பாள் மற்றும் கணவர் மோகனசுந்தரம் ஆகியோர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து வீட்டினுள் அழுகிய நிலையில் இறந்து கிடந்த 2 பேரின் உடலை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட  விசாரணையில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாததால் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்ததாக சாந்தி தெரிவித்துள்ளார். மேலும் கணவர் இறந்து 7 நாட்கள் ஆனதாகவும், அம்மா இறந்து 2 நாட்கள் ஆனதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இறந்தவர்களின் உடல்களை காவல்துறையினர் தங்கள் சொந்த செலவில் நல்லடக்கம் செய்வதாக தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் : தினேஷ் - ஈரோடு

First published:

Tags: Crime News, Erode, Local News