ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அதிமுகவுடனான ஆலோசனைக்கு பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. தற்போது நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 3 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவித்தபோதே ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஜனவரி 31 வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் மார்ச் 02 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் அதிமுக கூட்டணியில் யார் வேட்பாளராக களமிறங்குவார்கள் என்ற கேள்வி அரசியல் தளத்தில் கேள்வியாக எழுந்துள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அந்த தொகுதியில் தமிழ்மாநில காங்கிரஸ் போட்டியிட்டதால் அந்த தொகுதி தமிழ் மாநில காங்கிரஸிற்கே ஒதுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு இதுகுறித்து தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன், கூட்டணி தலைவர்களுடன் பேசி நல்ல முடிவை எடுப்போம் என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Erode, Erode Bypoll, Erode East Constituency, G.K.Vasan