முகப்பு /செய்தி /ஈரோடு / “வெற்றியை கொண்டாடும் மனநிலையில் இல்லை..” மகனை நினைத்து உருகிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

“வெற்றியை கொண்டாடும் மனநிலையில் இல்லை..” மகனை நினைத்து உருகிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

வெற்றிபெறுவேன் என்பது ஒரு மாதத்திற்கு முன்பே தெரியும் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அதிமுக சார்பில் தென்னரசுவும் உள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகாவும், தேமுதிக சார்பில் ஆனந்தனும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களாக இருந்தனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இதைப் படிங்க; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அப்டேட் உடனுக்குடன் 

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். ஐந்து சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் 39,855 வாக்குகளும், அதிமுக 13,515 வாக்குகளும் பெற்றிருந்தன. சுமார் 26,246 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில் இருந்தார்.காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்கு மையத்தில் இருந்து விறுவிறுவென வெளியேறினார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “வெற்றி விழாக்கள் நடத்தவோ, முழுமையான வெற்றியை கொண்டாடவோ கூடிய மனநிலையில் நான் இல்லை. எனது மகன் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து செய்வேன். வெற்றிபெறுவேன் என்பது ஒரு மாதத்திற்கு முன்பே தெரியும். இந்த வெற்றி நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி. 20 மாத ஆட்சிக் காலத்தில் 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு இந்த வெற்றி ஊக்கத்தை தரும். ஈரோடு மக்களுக்கு செய்ய வேண்டியதை அமைச்சர் முத்துசாமி உடன் இணைந்து செய்வேன்” என்று கூறினார்.

First published:

Tags: Erode Bypoll, EVKS Elangovan