ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், வேட்புமனு தாக்கல் கடந்த செவ்வாய்கிழமை தொடங்கியது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மேனகா, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னதாக, மாநகராட்சி அலுவலகத்திற்கு வேட்பாளர் மேனகா நாம் தமிழர் கட்சியினருடன் ஊர்வலமாக வந்த நிலையில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வேட்பாளருடன் நான்கு பேர் மட்டும் செல்ல அனுமதி வழங்கியதை அடுத்து, வேட்பாளர் மேனகா, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை வழங்கினார்.
பின்னர் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், மஞ்சள் மாநகரமான ஈரோடு சாயக்கழிவுகளால் கேன்சர் மாநகரமாக மாறி வருவதாக கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.