ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக நாம் தமிழர் கட்சியினர் சாலையின் ஓரத்தில் நின்று கட்சியின் சின்னத்தைக் காட்டியவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் சேகர், 3 பேர் நின்று சின்னத்தைக் காட்ட அனுமதியில்லை எனக் கூறியதாகத் தெரிகிறது. தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியினரிடமிருந்து செல்போனை அவர் பறித்து உடைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் நாம் தமிழர் கட்சியினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Erode Bypoll, Erode East Constituency, Naam Tamilar Cadre, Police