முகப்பு /செய்தி /ஈரோடு / “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது” - இடைத்தேர்தல் பரப்புரையில் இபிஎஸ் குற்றச்சாட்டு!

“தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது” - இடைத்தேர்தல் பரப்புரையில் இபிஎஸ் குற்றச்சாட்டு!

இபிஎஸ்

இபிஎஸ்

பேனா சிலைக்கு 81 ஒரு கோடி வேண்டுமா? நினைவு இடத்திற்கு முன்பு 2 கோடி ரூபாயில் பேனா சின்னம் வையுங்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பரப்புரை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது எனவும் 5 நாட்களில் 25 கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன எனவும் குற்றச்சாட்டியுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு பரப்புரையில் ஈடுபட்டார். அதிமுக அரசு கடந்த காலங்களில் என்னென்ன திட்டங்கள் செய்தது. அதிலும் குறிப்பாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு செய்யப்பட்ட நல திட்டங்கள் என்ன என்பதை பட்டியலிட்டு பேசினார்.

திமுக அரசு வந்த பிறகு மின்சார கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவை அதிகரித்து உள்ளதாகவும் வரும் நாட்களில் இது மேலும் மேலும் அதிகரித்து ஐந்து ஆண்டில் திமுக ஆட்சி முடியும் பட்சத்தில் செலுத்தக்கூடிய கட்டணங்களில் எண்ணிக்கை பன்மடங்கு உயரப்போகுவதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் கடந்த ஐந்து நாட்களில் 25 பேர் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் தற்போது கல்லூரி மாணவர்கள் கையில் கத்தி வைத்துக் கொண்டு வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பேசினார். இந்த ஆட்சியில் எது கிடைக்கிறதோ இல்லையோ கஞ்சா எளிதில் கிடைப்பதாக குற்றம்சாட்டி அவர், மாணவர்களின் எதிர்காலம் சீரழிவது வேதனை அளிப்பதாகவும்  குறிப்பிட்டார்.

ஒரு அமைச்சர் கல்லைக் கொண்டு எரிவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கையை வெட்டுங்கள் என்று சொல்கிறார், இப்படி பேசக்கூடியவர்கள் வைத்து கொண்டு எப்படி ரவுடிகளை கட்டுப்படுத்த முடியும்? முதலமைச்சரே சொல்கிறார் இரவில் கண்ணுறங்கி பகலில் கண்விழிக்கும் பொழுது கட்சியினரால் என்ன நடக்கும் என்று இப்படி கட்சிக்காரர்களையே இவரால் வழிநடத்த முடியவில்லை என்றால் எப்படி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து பேசிய அவர், “பேனா சிலைக்கு 81 ஒரு கோடி வேண்டுமா? நினைவு இடத்திற்கு முன்பு 2 கோடி ரூபாயில் பேனா சின்னம் வையுங்கள். வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை மிச்சம் உள்ள 79 கோடி ரூபாயில் மாணவர்களுக்கு பேனா வாங்கி கொடுங்கள். மக்களின் வரிப்பணத்தை வீணாக்காதீர்கள்” என்று கூறினார்.

First published:

Tags: CM MK Stalin, EPS, Erode Bypoll, Erode East Constituency