ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பிரச்சாரத்தில் பேசியபோது மகளிர் உரிமை தொகை ஆயிரம் வழங்குவது குறித்து வரும் மார்ச் மாதத்தில் பட்ஜெட் கூட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தேர்தல் விதிமுறையை மீறி முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும், எனவே தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக தேர்தல் பிரிவு துணை செயலாளர் இன்பதுரை ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இதையடுத்து, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையம் இதற்கு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பரப்புரையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஏற்கெனவே அறிவித்த திட்டம் குறித்து பேசுவது தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகாது என தெரிவித்தார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, CM MK Stalin, DMK, Erode, Tamilnadu