நடிகை சித்ரா ஹோட்டலில் அறை எடுத்து தங்கியதே தங்களுக்கு தெரியாது என, அவரது தாய் விஜயா தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில், கடந்த சில நாட்களுக்கு முன் சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததை அடுத்து, அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சித்ராவின் தாய் விஜயா, திருமணத்துக்கு முன்பே சித்ராவுக்கு கடன் இருந்தது உண்மைதான் என்றும், ஆனால் அதற்காக அவர் தற்கொலை செய்திருப்பார் என்பதை நம்ப முடியவில்லை எனவும் குறிப்பிட்டார். சித்ராவும், அவரது கணவரும் ஹோட்டலில் தங்க காரணம் என்ன என்றும், ஹேம்நாத் துரோகம் செய்துவிட்டதாகவும் விஜயா குற்றம்சாட்டினார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.