பணமில்லாமல் தவிக்கும் ரவிக்காக மார்கண்டேயன் வீட்டை விற்க முடிவு செய்ய, வீட்டை வாங்கப்போவது யார்?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் ‘தவமாய் தவமிருந்து’. ரவியும் ராஜாவும் பணத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள பேங்க்கில் இருக்கும் மலர் நகையை கேட்க ரேவதி எனக்கு நகை வேண்டும் என கூறி அப்பாவுக்கு உடம்பு சரியில்லை, உன் நகை வேண்டும் என பேங்கிற்கு கூட்டி சென்று லாக்கரில் இருந்து நகையை எடுக்க மலர் போலி நகையை மாற்றி வைத்து ரேவதியை அனுப்பி வைக்க இதனால் வீட்டில் பிரச்சனை வெடித்தது.
இதனையடுத்து ரவிக்காக மார்க் வீட்டை விற்று விடலாம் என முடிவெடுத்து ரெஜிஸ்ரேஷன் வரை செல்ல கடைசி நேரத்தில் ராஜா தான் வீட்டை வாங்க போகிறான் என தெரிய கடைசியில் ராஜாவுக்கே விற்று விடலாம் என முடிவெடுக்கின்றனர். என்னதான் வீட்டை விற்று விட முடிவெடுத்தாலும் வீடு நம் கையை விட்டு போகக்கூடாது என்ற ஆசை சீதாவுக்கு இருக்கிறது.
மேலும் ரேவதிக்கு ராஜா வீடு வாங்குவது பிடிக்காத காரணத்தினால் இந்த விஷயத்தை மலருக்கு தெரியப்படுத்துகிறாள். இதனால் மலர் எடுக்கப்போகும் முடிவு என்ன? வீடு மீண்டும் மார்க் கைக்கு வருமா? என பரபரப்பான காட்சிகளுடன் தவமாய் தவமிருந்து சீரியல் வரும் நாட்களில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.