முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பூஜாவால் மயக்கமான சரண்யா - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

பூஜாவால் மயக்கமான சரண்யா - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

பூஜாவால் மயக்கமான சரண்யா, ரங்கநாயகி கொடுத்த அதிர்ச்சி என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வீட்டில் பொருட்களை உடைக்கும் பூஜாவிடம் சரண்யா வாக்குவாதம் செய்ய பூஜா சரண்யாவை தள்ளிவிட சரண்யா கட்டிலில் இடித்து மயக்கம் அடைகிறாள்.

அங்கே வந்த சக்தி சரண்யாவுக்கு உதவி செய்ய இதை செல்வமுருகனும் பார்த்து பூஜாவை கண்டிக்கிறார். சக்தி சரண்யாவுக்கு முதல் உதவி செய்ய அந்த நேரத்தில் ரங்கநாயகி வந்து சக்தி தான் சரண்யாவை அடித்து விட்டால் என்று நினைத்துக் கொண்டு சக்தியை திட்டுகிறாள். பிறகு பூஜா என்று தெரிந்து பூஜாவை எச்சரித்து செல்கிறாள். பூஜா சக்தியிடம் உன்னை இந்த வீட்டிலிருந்து வெளியேற்றி காட்டுவேன் என்று கூறிவிட்டு செல்கிறாள்.

மறுபக்கம் மருத்துவமனையில் கோகிலா கார்த்திக் வேறு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள். மீனாட்சி வீட்டில், யமுனா சோகமாக இருப்பதை பார்த்து மீனாட்சி உனக்கு வேறு இடத்தில் கல்யாணம் செய்து வைக்கிறேன். அந்த கோகிலா வீட்டுக்கு மட்டும் நீ போகக்கூடாது என்று உறுதியாக சொல்ல யமுனா அதிர்ச்சி அடைகிறாள்.

பிறகு யமுனாவும் சாந்தாவும் கல்யாணமான விஷயத்தை எப்படி மீனாட்சியிடம் சொல்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv