முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சூர்யாவிடம் மாரியை போட்டு கொடுக்கும் தாரா - மாரி சீரியல் அப்டேட்!

சூர்யாவிடம் மாரியை போட்டு கொடுக்கும் தாரா - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

சூர்யாவிடம் மாரியை போட்டு கொடுக்கும் தாரா, மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனைவி குழந்தையை காப்பாற்ற மாரி போலீஸ் ஸ்டேஷன் ஓடி அங்கு உண்மையை சொல்ல போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரும் மற்றவர்கள் யாரும் மாரி சொல்வதை நம்ப மறுக்கின்றனர்.

மாரி சொல்ல சொல்ல கேட்காமல் மாரியை லாக்கப்பில் அடைத்து வைத்துவிட்டு இன்ஸ்பெக்டர் தன் குழந்தை மனைவியுடன் கிளம்பி செல்ல வீட்டில் சூரியாவிடம் தாரா மாரி போலீஸ் ஸ்டேஷனில் தன்மீது புகார் கொடுக்க போனதாக விஷயத்தை சொல்ல சூர்யா கோபப்பட்டு மாரியை பார்க்க ஸ்டேஷன் செல்கிறான்.

ஸ்டேஷனில் மாரி அடைத்திருப்பதை பார்த்து சூர்யா விஷயத்தை கேட்க மாரி இன்ஸ்பெக்டர் குழந்தை மனைவிக்கு ஆபத்து பற்றி சொல்ல பிறகு யோசித்து சூர்யா மாரி சொல்வது சரியா தவறா என்று செக் பண்ண கலவரத்துக்கு செல்கிறான்.

Also read... நான் அரசர் என்றால் அமிதாப்பச்சன் பேரரசர் என ரஜினி சொன்னதன் ரகசியம்

அங்குள்ள லேடி Pc மாரியை திறந்து விட மாரி ஓடுகிறாள். கலவரத்தில் வந்த மாதிரி பாம் எடுப்பதில் இருந்து இன்ஸ்பெக்டர் குழந்தையும் மனைவியும் காப்பாற்றுகிறாள்.  அப்போது அவளுக்கு மீண்டும் முன்னறிவிப்பு ஏற்பட சூரியாவுக்கு ஆபத்து என்று தெரிய அதை இன்ஸ்பெக்டரிடம் சொல்கிறாள்.

இதை கேட்டு இன்ஸ்பெக்டர் இங்குதான் உன் கணவர் வரவில்லையே என்று கேட்க கண்டிப்பாக வருவார் என்று சொல்ல அப்போது சூர்யா காரில் வந்து இறங்குகிறான். அடுத்து நடக்கப் போவது என்ன? மாரியின் முன் அறிவிப்பு பலிக்குமா? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv