முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / காலேஜில் அதிரடியாக பதில் சொல்லி மாஸ் காட்டிய செந்தில் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

காலேஜில் அதிரடியாக பதில் சொல்லி மாஸ் காட்டிய செந்தில் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

காலேஜில் அதிரடியாக பதில் சொல்லி ஷாக் கொடுத்த செந்தில், ஆனந்த கண்ணீர் விட்ட அமுதா என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். சீரியலில் இன்றைய எபிசோடில் HOD புரொபசரிடம் ஒருத்தன் பாஸ் பண்ண கூடாதுன்னே நீ கேள்வி கேக்குற, இதே கேள்விக்கு உனக்கு முதல்ல பதில் தெரியுமா, நீ பதில் சொல்லிட்டேன்னா நான் வேலையை விட்டு போயிடுறேன் என கேள்வி எழுப்ப புரொபசர் திருதிருவென முழிக்கிறார்.

அடுத்து HOD அவரிடம் சொல்லிக் குடுக்குற உனக்கே தெரியலை, 5 வருஷம் படிச்சி பாஸ் ஆகனும்னு ஒருத்தன் வந்திருக்கான் அவன் கிட்ட நீ இப்படி கேள்வி கேட்டா என்ன நியாயம், ஒழுங்கா கேள்வியை கேளு என சொல்ல, புரொபசர் வேறு கேள்வியை கேக்க, செந்தில் பதில் சொல்ல அனைவரும் கை தட்ட அமுதா ஆனந்த கண்ணீர் விட உமா, பழனி வெறுப்பாகின்றனர்.

இந்த பக்கம் ஆஸ்பிட்டலில் அன்னமிற்கு காயத்தை துடைத்து விட்டு மருந்து வைக்க போக, மாணிக்கம் எங்க அக்காவுக்கு இந்த மருந்து தேவை இல்ல, வேற ஒண்ணு இருக்கு என அமுதாவிற்கு வீடியோ கால் செய்கிறார். அமுதா போனை அட்டெண்ட் செய்து செந்தில் பேசுவதை காட்ட அதைப் பார்த்ததும் அன்னலட்சுமி மகிழ்ச்சி அடைகிறாள்.

அடுத்து HOD செந்திலை கட்டிப் பிடித்தபடி, நீ போய் பேசு, எப்படி படிச்சி பாஸ் பண்ணுனேன்னு, அது மத்தவங்களுக்கு ஒரு encouragement டா இருக்கும் என சொல்ல, செந்தில் இது என்னோட வெற்றி இல்ல, அமுதாவோட வெற்றி அவ பேசுனாத்தான் சரியா இருக்கும் என சொல்கிறான்.

அடுத்து HOD அமுதாவை பேச சொல்ல அமுதா மேடை ஏறி என் புருஷனோட படிப்புல எங்க குடும்பத்தோட கவுரம் அடங்கி இருக்கு.. இவரு படிச்சி பாஸ் ஆகனுங்குறதுக்காக வீட்டுல உள்ள பொம்பளைங்க நாங்க கஷ்டப்பட்டோம். இப்படி ஏதோ ஒரு லட்சியத்துக்காக படிக்க வர்றவங்களை தயவு செஞ்சு ஊக்கப்படுத்துங்க.. எங்க குடும்பம் மாதிரி வீட்டுல முதன் முறையா படிச்சி பட்டம் வாங்கனும்னு நினைக்கிற எத்தனையோ குடும்பம் இருக்கு.. அவங்க படிக்க வரும் போது உங்க புத்திசாலிதனத்தை காட்டுறதுக்காக தேவை இல்லாத கேள்வி கேட்டு முடக்கி போட்டுராதீங்க என பேசுகிறாள்.

மேலும் புத்திசாலி மட்டும் தான் பள்ளிக்கூடம், காலேஜ் படிக்க வரனும்னா எதுக்கு பள்ளிக் கூடம், காலேஜ் எல்லாம்.. படிப்பு வராதவங்களுக்கு சொல்லி குடுக்குறதுக்குத் தானே இந்த பள்ளிக் கூடம், காலேஜ் எல்லாம்.. படிப்பு வராதவங்களுக்கு படிப்பு சொல்லி குடுங்க என சொல்ல, அனைவரும் கை தட்டுகின்றனர்.

பிறகு அமுதா செந்திலை சாப்பிட சொல்ல, செந்தில் அமுதாவிடம் சாப்பிடுறதுக்கு முன்னால நீ சொன்ன ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்த விரும்புறேன் நான் எக்ஸாம் பாஸ் பண்ணிட்டா உம்மா தர்றதா சொன்ன என சொல்ல அமுதா பார்க்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv