விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஒளிபரப்பாகி வரும் தொடர் அன்புடன் குஷி. இத்தொடரில் நாயகனாக ப்ரஜின் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆரம்பத்தில் மான்சி ஜோஷி நடித்து வந்த நிலையில் திடீரென சீரியலில் இருந்து விலகினார்.
அவருக்கு பதிலாக குஷி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ரேஷ்மா வெங்கடேஷ். தற்போது 200-க்கும் அதிகமான எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இத்தொடரிலிருந்து தான் விலகுவதாக ரேஷ்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்திருப்பதாவது, நான் அன்புடன் குஷி தொடரிலிருந்து விலகுகிறேன். இனி என்னை அத்தொடரில் குஷியாக நீங்கள் பார்க்க முடியாது. அந்தக் கதாபாத்திரத்தை நான் மிஸ் செய்கிறேன். அன்புடன் குஷி சீரியல் குழுவிற்கும் விஜய் டிவிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. உங்களது ஆதரவு எனக்கு என்றும் தேவை. கவலைப்பட வேண்டாம் நண்பர்களே. விரைவில் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் ரேஷ்மா வெங்கடேஷ்.
ரேஷ்மா நடித்து வந்த கதாபாத்திரத்தில் இனி அவருக்கு பதிலாக நடிக்கப்போவது யார் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை. அன்புடன் குஷி தொடரில் ப்ரஜின், லோகேஷ் பாஸ்கரன், மீரா கிருஷ்ணா, சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி, சீனு, கவுசல்யா செந்தாமரை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.