முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / புதிய மைல்கல்லை எட்டிய சன் டிவி-யின் பாண்டவர் இல்லம்!

புதிய மைல்கல்லை எட்டிய சன் டிவி-யின் பாண்டவர் இல்லம்!

பாண்டவர் இல்லம்

பாண்டவர் இல்லம்

பாண்டவர் இல்லம் ஜூலை 2019-ல் தனது முதல் ஒளிபரப்பை தொடங்கியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாண்டவர் இல்லம் சீரியல் 1000 எபிசோட்களை கடந்துள்ளது. 

பாண்டவர் இல்லம் சீரியல் அதன் சுவாரஸ்யமான கதைக்களம் மற்றும் திறமையான நடிகர்களுக்காக பெயர் பெற்றது. தற்போது அது புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த பிரபலமான சீரியல், தற்போது 1000 அத்தியாயங்களை நிறைவு செய்துள்ளது. இதை சன் தொலைக்காட்சி சிறப்பு போஸ்டர் மூலம் உறுதி செய்துள்ளது. இதையடுத்து பாண்டவர் இல்லம் சீரியலுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சீரியலின் புதிய மைல்கல் குறித்து பேசிய இயக்குனர் செல்வம் சுப்பையா, "பாண்டவர் இல்லம் தொடர் புதிய மைல்கல்லை எட்டியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த சீரியலின் முழு 'பயணம்' என் கேரியருக்கு உயிர் கொடுத்தது" என்றார்.

இது குறித்து நடிகர் நரேஷ் ஈஸ்வர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இயக்குநர் செல்வம் சுப்பையாவுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி, மேலும் பாண்டவர் இல்லத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பாக்கியம் பெற்றுள்ளேன் என்றார்.




 




View this post on Instagram





 

A post shared by SunTV (@suntv)



இதைப் பற்றி பேசிய நடிகை பாப்ரி கோஷ், "பாண்டவர் இல்லம் போன்ற அற்புதமான சீரியலில் அங்கம் வகிப்பதில் நான் பெருமைப்படுகிறேன், மேலும் 1000-வது எபிசோடை எட்டப் போகிறோம் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.

பாண்டவர் இல்லம் ஜூலை 2019-ல் தனது முதல் ஒளிபரப்பை தொடங்கியது. இந்தத் தொடரில் பாப்ரி கோஷ், ஆர்த்தி சுபாஷ், கிருத்திகா அண்ணாமலை மற்றும் நரேஷ் ஈஸ்வர், குகன் சண்முகம், நேசன் நெப்போலியன், சுரேந்தர் ராஜ், முகமது, அனிஷா, அனு சுலசாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Sun TV