மகராசி தொடரில் இருந்து திவ்யா ஸ்ரீதர் விலகுவதாகவும், அவருக்கு பதிலாக ஸ்ரீத்திகா சனீஷ் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை நண்பகல் 12 மணிக்கு மகராசி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரை முதலில் எஸ்.பி ராஜ்குமார் இயக்கி வந்தார். 80 எபிசோடுகளை இயக்கிய அவர், தொடரில் இருந்து விலகினார். அவருக்கு அடுத்தபடியாக சுந்தரேஸ்வரன் இயக்கி வருகிறார். இரண்டு ஆண்டுகளைக் கடந்துள்ள இந்த சீரியலில் ஸ்ரீரஞ்சனி, திவ்யா ஸ்ரீதர், எஸ்.எஸ்.ஆர். ஆர்யான், விஜய், ராம்ஜி, ரியாஸ் கான், காயத்ரி யுவராஜ், மகாலட்சுமி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
கொரோனா ஊரங்கு காரணமாக மகாராசி தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது பாதிப்புகள் குறைந்து தளர்வுகள் கொடுக்கப்படுவதால், ஷூட்டிங்கை தொடங்க நாடகக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால், இதில் பங்கேற்க திவ்யா ஸ்ரீதர் தயக்கம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக விலகாததால், பாதுகாப்பைக் கருதி ஷூட்டிங்கில் பங்கேற்க முடியாது எனக் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவருக்கு பதிலாக புதிய நபரை களமிறக்க திட்டமிட்டுள்ள நாடகக்குழு, அந்த நடிகையையும் தேர்வு செய்துள்ளனர்.
திவ்யா ஸ்ரீதர் கதாபாத்திரத்தில் ஸ்ரீத்திகா சனீஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் நாடகக்குழு அறிவிக்கிறது. இதனை உறுதிபடுத்தும் விதமாக ஸ்த்ரீதிகா வீடியோ ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், கிரீடம் படத்தில் இருக்கும் ”வேறென்ன வேண்டும் இந்த உலகத்திலே” பாடலை, மகராசி தொடரில் புவியரசன் சிதம்பரம் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் எஸ்.எஸ்.ஆர் ஆர்யானுடன் இணைந்து, பாடி பதிவிட்டிருப்பது யூகத்திற்கு பதிலாக அமைந்துள்ளது.
ஸ்ரீத்திகா ஏற்கனவே
மெட்டி ஒலி நாடகத்தில் நடித்துள்ளார். முத்தாரம் தொடரில் ஷாலினியாகவும், கலசம் தொடரில் மதுமிதாவாகவும் நடித்தார். உரிமை தொடரில் புவனா நட்ராஜன், குலதெய்வம் தொடரில் அலமேலு ஆகிய கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்துள்ளார். ஏற்கனவே நல்ல அறிமுகமும், அனுபவமும் நிறைந்தவராக இருப்பதால், திவ்யாவின் மகாராசி கதாபாத்திரத்துக்கும் பொருத்தமாக இருப்பார் எனக் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பல்வேறு தொடர்களில் நடித்திருந்தாலும்
நாதஸ்வரம் தொடரில் அவர் ஏற்று நடித்த மலர்கொடி கோபாலகிருஷ்ணன், கல்யாண பரிசு 2 தொடரில் நடித்த வித்யா ஆகிய கதாபாத்திரங்கள் அவருக்கும் பெரும் புகழை பெற்றுக் கொடுத்தது. சின்னத்திரையில் முன்னணி நடிகையாகவும் மாறினார். மகராசி தொடரில் மௌனிகா தேவி மல்லிகாவாகவும்,
ரியாஷ்கான் செந்தூரபாண்டியனாகவும் நடிக்கின்றனர். ஒருவேளை ஸ்ரீத்திகா வரவு உண்மையானால், இனிவரும் காலங்களில் பாரதி புவியரசனாக மகராசி தொடரில் அவர் இடம்பெறுவார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.