2001ம் ஆண்டில் பாலா இயக்கத்தில் வெளியான 'நந்தா' திரைப்படத்தில் தான் ஏற்று நடித்த 'லொடுக்கு பாண்டி' என்கிற கதாபாத்திரத்தின் வழியாக, அதாவது தான் அறிமுகமான முதல் படத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டவர் - நடிகர் கருணாஸ்.
12 வயது முதல் தன்னை ஒரு கானா பாடகராக இந்த உலகிற்கு வெளிப்படுத்த தொடங்கிய கருணாஸிற்கு, "கானா கருணாஸ்" என்கிற ஒரு புனைப்பெயரே இருப்பது நம் பலருக்கும் தெரியாத ஒரு விடயமாகும். இதனொரு பகுதியாக நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் விமர்சகர் மற்றும் கலை வரலாற்றாசிரியர் ஆன யுஹி சேதுவின் 'நையாண்டி தர்பார்' நிகழ்ச்சியின் வழியாக
கருணாஸ் சின்னத்திரையில் அறிமுகமானார். அப்போது தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குனர்களில் ஒருவாராக வளர்ந்து வந்த டைரக்டர் பாலா, கருணாஸின் ஒரு பாடலைக் கேட்டதன் விளைவாக, அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படமான நந்தாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் கருணாஸ்.
cook with comali : ரசிகர்கள், போட்டியாளர்களுக்கு காத்திருக்கும் மிகப் பெரிய சர்ப்பிரைஸ்!
அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல், தளபதி விஜய் மற்றும் அஜித்குமார் தொடங்கி சிம்பு, தனுஷ் என கிட்டதட்ட அனைத்து பெரிய ஹீரோக்களின் படங்களிலும் காமெடியன் ஆக, துணை நடிகராக நடித்து அசத்தினார், கருணாஸ். இதற்கிடையில், கல்லூரிகளுக்கிடையேயான பாடல் போட்டிகளில் கருணாஸ் விருந்தினராக, நடுவராக கலந்து கொண்ட போது - தமிழ் திரையுலகில் பின்னணி பாடகிகளில் ஒருவரான - கிரேஸை சந்தித்து உள்ளார். மனப்பொருத்தத்தின் விளைவாக இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது.
2004ம் ஆண்டு முதல் சினிமாவில் பாடி வந்த
கிரேஸ் 2016க்கு பிறகு பெரிய அளவில் பாடல்களை பாடுவதில்லை. ஏனெனில் அவர் சின்னத்திரையில் அதிக கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வரும் கிரேஸ், தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகவும் கலக்கி வருகிறார். சமீபத்தில் கிரேஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து பேட்டி ஒன்றை அளித்து உள்ளார்.
வெள்ளித்திரையில் டானாக உயர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயன்!
அந்த பேட்டியின் போது தான் கிரேஸ் தான் நடத்தி வரும் ஹோட்டல்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தி உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ஹோட்டல் நடத்தலாம் என்பதில் எங்களை விட கருணாஸிற்கு தான் ஆர்வம் அதிகம். ஆரம்பத்தில் சென்னை வடபழனியில் 'லொடுக்கு பாண்டி' என்கிற ஒரு ஹோட்டலை நாங்கள் நடத்தினோம்.
அதன்பிறகு ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கரூரில் 'திண்டுக்கல் சாரதி' என்கிற ஹோட்டல்களை நடத்தி வந்தோம். பின்னர் கருணாஸ் 'ரத்ன விலாஸ்' என்கிற ஒரு ஹோட்டல் திறந்தார். சினிமாவிற்கு அடுத்தபடியாக வேறொரு தொழில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் கருணாஸிற்கு ஆரம்பத்தில் இருந்தே உள்ளது; அது ஹோட்டல் தான் என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார் என்றும் கிரேஸ் கூறி உள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.