முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Bigg Boss Tamil 5: மற்றவரை பிரதிபலிக்கும் கண்ணாடி டாஸ்க்... கண்ணீர் விட்ட அக்‌ஷரா

Bigg Boss Tamil 5: மற்றவரை பிரதிபலிக்கும் கண்ணாடி டாஸ்க்... கண்ணீர் விட்ட அக்‌ஷரா

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ’உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி’ பிக் பாஸ் டாஸ்க் வழங்கப்படுகிறது.

  • Last Updated :

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை, போட்டியாளர் மதுமிதா, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ’உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி’ டாஸ்க் வழங்கப்படுகிறது. போட்டியாளர்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு, டீம் ஏ கண்ணாடியாக மாறி, டீம் பி-யினரை பிரதிபலிக்க வேண்டும். சிபி, அக்‌ஷராவின் கண்ணாடியாகவும், இசைவாணி, இமான் அண்ணாச்சியாகவும் மாற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கலகலப்பான இந்த ப்ரோமோவின் இறுதியில் அக்‌ஷரா அழுகிறார்.

என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil 5