முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அந்த ஒரு ஆள் கிட்ட உஷாரா இரு... பாவனியை எச்சரிக்கும் குடும்பத்தினர்

அந்த ஒரு ஆள் கிட்ட உஷாரா இரு... பாவனியை எச்சரிக்கும் குடும்பத்தினர்

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தற்போது பாவனியின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார்கள்.

  • 1-MIN READ
  • Last Updated :

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து அபினய் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தவிர, அமீர் மற்றும் சஞ்சீவ் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தற்போது பாவனியின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார்கள். அப்போது எல்லோரும் ஃப்ரெண்ட்லியாக இருக்கிறார்கள் ஒருவரைத் தவிர என அமீரை குறிப்பிட்டு கூறுகிறார் பாவனியின் சகோதரி. அதற்கு பதிலளிக்கும் பாவனி ‘இல்லை இல்லை... நான் அவனிடம் நீ நீயாக இரு, நான் நானாக இருக்கிறேன் என சீரியஸாக சொல்லி விட்டேன்’ என்கிறார். என்ன நடந்தது என்பதை இன்று இரவு தெரிந்துக் கொள்வோம்

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil 5