தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் இப்படி பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
ரெமோ, வேலைக்காரன், சீமராஜா ஆகிய படங்கள் சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பாராட்டை பெற்று தந்த படங்கள் எனக் கூறலாம். 2019 ஆம் ஆண்டில் நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ ஆகிய இரண்டு படங்கள் வெளியானது. அதற்கு பிறகு எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. தற்போது டாக்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதனை தொடர்ந்து அயலான் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தை இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்குகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் மூன்று நாட்களே நடைபெற உள்ளதாக படத்தின் கதாநாயகி ரகுல் ப்ரீத்தி சிங் ட்வீட் செய்துள்ளார்.அ தில் ‘கடைசி மூன்று நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதம் உள்ளது. இயக்குனர் ரவிக்குமார் மற்றும் சிவகார்த்திக்கேயனுடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி’ எனக் கூறியுள்ளார்.
ரகுல் ப்ரீத்தி சிங்கின் ட்வீட்டுக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் ‘உங்களுடன் வேலை செய்ததில் மகிழ்ச்சி. என்னை எப்போதும் ஆங்கிலத்தில் பேச வைத்ததற்கு நன்றி. நான் பேசியது பிரிட்டிஷ் இங்கிலிஷ்’ என்று நினைக்கிறேன் என நக்கலாக பதிவிட்டுள்ளார்.
Happy to work with you @Rakulpreet ❤️ and thanks for making me talk in English all the time ( I think i speak Britis Englis 🙄😂)😃😃🙏 https://t.co/6Gv0R7vL5W