‘சர்கார்’கதை திருட்டு விவகாரத்தில் தன்னுடைய ஆதரவை நடிகை வரலட்சுமி சரத்குமார் வெளிப்படையாக கூறியுள்ளார்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் வரலட்சுமி,பழ.கருப்பையா, யோகிபாபு, ராதாரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில் படத்தின் கதை திருடப்பட்டதாக வருண் என்கிற ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்னரே தனது கதையை ‘செங்கோல்’என்ற தலைப்பில் பதிவு செய்து வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
அதே நேரத்தில் செங்கோல் கதையும் சர்கார் கதையும் ஒன்றுதான் என்று எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். இயக்குநர் கே.பாக்யராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இக்கதை திருடப்பட்டது அல்ல. மொத்தமும் என்னுடைய கதைதான் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் படத்தில் நடித்திருக்கும் நடிகை வரலட்சுமி
இந்த விவகாரத்தில் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்த தனது ட்விட்டர் பதிவில், “நான் இயக்குநர் முருகதாஸ் பக்கம் நிற்கிறேன். உண்மை கண்டிப்பாக வெல்லும். காலம் அதை சொல்லும்” என்று கூறியுள்ளார்.
அதே போல் ஸ்பைடர் படத்தின் தயாரிப்பாளர் தாகூர் மது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.