‘மாஸ்டர்’ படத்தை இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட நபரை படக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
மாஸ்டர் திரைப்படம் நாளை திரையில் வெளியாக இருக்கும் நிலையில், நேற்று சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியானது. இதனையடுத்து படத்தின் காப்பியை இதுவரை யார் யாரிடம் கொடுத்தோம் என்ற ரீதியில் படக்குழுவினர் விசாரணையை தொடங்கினர்.
மேலும் படிக்க...இணையத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் - அதிர்ச்சியில் படக்குழு
அதில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக டிஜிட்டல் நிறுவனம் ஒன்றிடம் திரைப்படத்தின் காப்பி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் பணிபுரியும் நபர் திருட்டுத்தனமாக படத்தை பதிவு செய்து கசிய விட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும் படிக்க... தயவுசெய்து லீக்கான காட்சிகளைப் பகிராதீர்கள் - மாஸ்டர் படக் குழு வேண்டுகோள்
இதனையடுத்து அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். குற்றம் செய்தவரை கண்டுபிடிக்க ட்விட்டர் நிறுவனம் படக்குழுவுக்கு உதவி செய்துள்ளது.