கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கவுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. அதன்படி இந்தப் படத்தில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, சரத்குமார், நடிகர் பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
லைகா நிறுவனம் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. படத்துக்கான கதையை மணிரத்னமும், குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுத ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடிய மணிரத்னம், பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் என்றும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அடுத்து தான் இயக்க இருக்கும் படத்துக்கான கதையை தயார் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஊரடங்கு முடிந்து நிலைமை சீரான பின்னர் பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.