‘ஜோ’ உடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா? - சூர்யா பதில்
‘ஜோ’ உடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா? - சூர்யா பதில்
அண்மையில் நீட் மற்றும் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக சூர்யா சில கேள்விகளை எழுப்ப, அது அரசியல் களத்தில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
ட்விட்டரில் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடினார் நடிகர் சூர்யா. ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த சூர்யாவிடம் ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு நடிகர் சூர்யா பதிலளித்துள்ளார்.
இயக்குநர் செல்வராகவன் - நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படம் என்ஜிகே. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். அரசியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் மே 31-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதற்காக படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளது படக்குழு.
இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடினார் நடிகர் சூர்யா. ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த சூர்யாவிடம் ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா, கதை கேட்டிருக்கிறேன். விரைவில் இணைந்து நடிக்க வாய்ப்பிருக்கிறது. இருவரும் மீண்டும் திரையில் தோன்றும் நம்பிக்கை உள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 24, சிங்கம், தானா சேர்ந்த கூட்டம், ஆகிய படங்கள் தனது குழந்தைகளுக்கு பிடித்த படம் என்றும், சமூக வலைதளத்தில் தனது ரசிகர்களின் நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.