நடிகை யாஷிகா ஆனந்த் தனக்கு திருமணமாகும் விஷயத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் இளம் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது. தனது 14 வயதிலேயே நடிக்கத் தொடங்கிய இவர், தமிழ் படங்கள், டிவி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் நடித்துள்ளார். குறிப்பாக, அடல்ட் காமெடி படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் புதுச்சேரியில் நடந்த ஒரு விருந்தில் கலந்துக் கொண்ட பின், சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தார் யாஷிகா. சூளேரிக்காடு அருகே வரும்போது, அதிவேகமாக வந்த அவரது கார் விபத்துக்குள்ளாது. இதில் சீட் பெல்ட் அணியாத யாஷிகா ஆனந்த்தின் தோழி வள்ளி செட்டி பவானி காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, அறுவை சிகிச்சை, மருத்துவமனை என நீண்ட காலம் ஓய்வில் இருந்தார் யாஷிகா ஆனந்த். இதற்கிடையே, சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவதையும் அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் யாஷிகா வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்று வைரலாகி வருகிறது.
மகானில் நடித்த ஒவ்வொரு நொடியும் ஸ்வீட் கனவு - விக்ரம் பெருமிதம்!

யாஷிகா ஸ்டோரி
அதில், 'எனக்கு திருமணம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் வழங்கி விட்டார்கள். இது செட்டில் ஆக வேண்டிய நேரம். நான் சினிமாவை காதலிக்கிறேன். என்ன ஆனாலும் உங்களை எண்டெர்டெயின் செய்வேன். இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். நமக்கு லவ் எல்லாம் செட் ஆகாது’ எனத் தெரிவித்துள்ளார்.
சன் டிவி நிகழ்ச்சியில் விஜய்... தொகுப்பாளர் யாருன்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!
மாப்பிள்ளை யார், எப்போது திருமணம் என்ற விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.