முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஒருவழியாக 3 வருடங்களுக்கு பிறகு துவங்கும் விஜய் சேதுபதி: சுவாரசியத் தகவல்

ஒருவழியாக 3 வருடங்களுக்கு பிறகு துவங்கும் விஜய் சேதுபதி: சுவாரசியத் தகவல்

பூஜையுடன் துவங்கிய விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பு

பூஜையுடன் துவங்கிய விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பு

விஜய் சேதுபதி - இயக்குநர் நித்திலன் இணையும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் சேதுபதி -  நித்திலன் பெரியசாமி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

பாரதிராஜா - வித்தார்த் கூட்டணியில் 2017 ஆம் ஆண்டு வெளியாகி பாராட்டைப் பெற்ற திரைப்படம் குரங்கு பொம்மை. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் நித்திலன் பெரியசாமி என்பவர் இயக்கியிருந்தார். இவரை சினிமா துறையினரும், விமர்சகர்களும் வெகுவாக பாராட்டினர்.

இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து அவர் தன்னுடைய இரண்டாவது படத்தை விஜய் சேதுபதி நடிப்பில் இயக்கவிருந்தார். இந்த படம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்படவேண்டியது.  ஆனால் ஒரு சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி- நித்திலன் பெரியசாமி கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. அதில் விஜய் சேதுபதி பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டன. விஜய் சேதுபதி சோலோ ஹீரோவாக நடித்து கடைசியாக வெளியான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் நித்திலன் பெரியசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படம் அவருக்கு வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Actor Vijay Sethupathi