பீஸ்ட் திரைப்படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் விற்பனை செய்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
விஜய்யின் முற்போக்கு பிம்பத்தை அடித்து நொறுக்கிய பீஸ்ட்
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பீஸ்ட் திரைப்படம் நேற்று வெளியானது. அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட முதல் காட்சியைக் காண திரையரங்குகளில் திரண்டனர் ரசிகர்கள். படம் முடிந்ததும் விஜய்யின் தீவிர ரசிகர்களே பீஸ்ட் திரைப்படம் தங்களுக்கு ஏமாற்றத்தை தந்ததாக தெரிவித்தனர். இதனால் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
பீஸ்ட் ரசிகர்கள் காட்சிக்கே ஆள் இல்லாமல் காற்று வாங்கிய திரையரங்கம்
இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் விற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். விஜய் மக்கள் இயக்கம் விருகைப்பகுதி தலைவராக இருந்து வருபவர் வேல் முருகன். இவர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தின் டிக்கெட்டை மன்றத்தின் சார்பாக 180 டிக்கெட் காசி டாக்கீஸ் தியேட்டரிலிருந்து பெறப்பட்டதாகவும், அதில் 46 டிக்கெட் ரசிகர்களுக்கு கொடுத்தது போக மீதி 134 டிக்கெட்டை தியேட்டர் கவுண்டர் அருகே ரூ.195/-, ரூ.300/- என விற்றுள்ளார். அவரை எம்.ஜி.ஆர் நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.பலவேசம் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வழக்கு பதிவு செய்தார். பின்னர் ஜாமினில் வெளியில் வந்தார் வேல் முருகன்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.