முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'வடக்கனும். தெற்கனும்.... சக ஏழை மனிதன்தான்' - விஜய் ஆண்டனி அதிரடி கருத்து

'வடக்கனும். தெற்கனும்.... சக ஏழை மனிதன்தான்' - விஜய் ஆண்டனி அதிரடி கருத்து

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர். என்று விஜய் ஆண்டனி குறிப்பிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு கோடியில் ஒருவன் படம் வெளியாகியிருந்தது. கடந்த ஆண்டு அவரது நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. மேலும் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் என வரிசையாக வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன.

பிச்சைக்காரன் படத்தின் வெற்றிக்கு பிறகு பிச்சைக்காரன் 2 படத்தை தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கவும் செய்கிறார். பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு மலேசியா நாட்டில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்றுவந்தது.

அங்கு இப்படத்தின் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி காயமடைந்தார். இது திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''அன்பு இதயங்களே நான் 90% குணமாகிவிட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை. நான் இப்பொழுது முன்பை விட அதிக சந்தோஷத்தை உங்களால் உணர்கிறேன். வரும் ஏப்ரலில் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் துவங்குகிறேன்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

அதற்கேற்ப படத்தின் முதல் 4 நிமிட காட்சி டிரெய்லராக வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றது. அந்த டிரெய்லரில் பணம் உலகை காலி பண்ணிவிடும் என்ற வரிகள் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில்,  ''வடக்கனும் கிழக்கனும் தெற்கனும் மேற்க்கனும்... நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Vijay Antony