தெலுங்கு சினிமா தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தெலுங்கு திரைப்பட தொழிலாளர்கள் நடத்திய திடீர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக சுமார் 25-க்கும் மேற்பட்ட சினிமா படப்பிடிப்புகள் இன்று பாதிக்கப்பட்டன.
சினிமா டிக்கெட் விலை உயர்வு, நடிகர் நடிகைகளின் சம்பளம் உயர்வு ஆகியவற்றை தொடர்ந்து, தங்களுக்கும் சுமார் 45 சதவிகிதம் வரை சம்பள உயர்வு அளிக்க வேண்டும் என்று தெலுங்கு திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்தினர், கடந்த சில நாட்களாக தயாரிப்பாளர்களை வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் தொழிலாளர்களின் கோரிக்கையை தயாரிப்பாளர்கள் சங்கம் பரிசீலிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதனால் நேற்று திடீரென்று அவர்கள் ஹைதராபாத் கிருஷ்ணா நகரில் உள்ள பிலிம்ஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி தயாரிப்பாளர் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வலியுறுத்தினர். தங்களது கோரிக்கையில் திரைப்பட தொழிலாளர் சங்கத்தினர் உறுதியாக உள்ளனர். எனவே நேற்று ஐதராபாத்தில் நடைபெறவேண்டிய சுமார் 25-க்கும் மேற்பட்ட சினிமா தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டன.
புதுப்பொண்ணு நயன்தாரா கையில் இப்படியொரு ரகசியமா?
ஆனால் விதிகளின்படி 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அளித்து திரைப்பட தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டும். எனவே இது சட்டவிரோத போராட்டம் என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் எங்கள் போராட்டத்தை வலுவிழக்க செய்ய அனைத்து விதமான முயற்சிகளிலும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்று திரைப்பட தொழிலாளர் சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ் அலுவலகத்தில் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி நேற்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.