சூர்யா நடிக்கும் 42-வது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நிறைவடைந்துள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் சென்னையில் தொடங்கியது. சில நாட்கள் மட்டும் இங்கு படப்பிடிப்பு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 20ஆம் தேதி கோவாவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்கினர்.
அதில் 200 பவுன்சர்கள் கலந்து கொள்ளும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதன் பிறகு படத்தின் நாயகி பங்கேற்கும் காட்சிகளும் படமாக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் கோவாவில் நடைபெற்று வந்த சூர்யா 42 படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கும் என கூறப்படுகிறது.
Also read... நான் அரசர் என்றால் அமிதாப்பச்சன் பேரரசர் என ரஜினி சொன்னதன் ரகசியம்
சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படம் வரலாற்று பின்னணியில் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதே சமயம் 3D தொழில்நுட்பத்திலும் படத்தை உருவாக்குகின்றனர். மேலும் 10-ம் மேற்பட்ட மொழிகளில் சூர்யா 42 படத்தை வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Suriya